மானாமதுரை பேரூராட்சி அலுவலத்தில் 100 நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 100 நாள் வேலை கேட்டு மனுக்கொடுக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 100 நாள் வேலை கேட்டு மனுக்கொடுக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 இப்போராட்டத்தில் ஏராளமான பெண்கள் மனுக்களுடன் பங்கேற்றனர். ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் வேலை உறுதியளிப்புத் திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி, வேலை வழங்குமாறு அவர்கள் வலியுறுத்தினர். போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் முனியராஜ், சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் ஆர்.வீரையா, மாவட்டக்குழு உறுப்பினர் கே.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.    பேரூராட்சி  அலுவலகத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் இல்லாததால், பெண்களிடம் இருந்து மனுக்களை ஊழியர்கள் பெற்றுக்கொண்டனர். அதன்பின் பெண்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com