வேன் திருட்டு: ஓட்டுநர் கைது

சிவகங்கையில் வேனை திருடிச் சென்றதாக அதன் ஓட்டுநரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

சிவகங்கையில் வேனை திருடிச் சென்றதாக அதன் ஓட்டுநரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
 சிவகங்கை காமராசர் காலனியைச் சேர்ந்தவர் ஜான்பாஸ்டீன் (42). இவருக்கு சொந்தமான வேனில் அதே பகுதியைச் சேர்ந்த விஜயன்(27) என்பவர் ஓட்டுநராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேனை ஓட்டிச் சென்ற விஜயன் திரும்ப வரவில்லையாம். இதுகுறித்து ஜான்பாஸ்டீன் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இந்நிலையில் விஜயனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த வேனை மீட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com