தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தலைமைப்பண்பு மற்றும் சமூக விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
உதவித்தலைமை ஆசிரியர் வளனரசு, முதுகலை வணிகவியல் ஆசிரியர் சுப்பிரமணியன், மாணவர் அஜய் பாரத் ஆகியோர் தற்போதைய அரசியலில் தலைமைத்துவம் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினர். முகாமில் தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி, புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளி, இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தூய மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித ஜான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். மாணவர்கள் தங்கள் தனித்திறன்களை வெளிப்படுத்தினர்.