சிவகங்கையில் நவ.24 இல் விவசாயிகள் குறைதீர் முகாம்

 சிவகங்கையில் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 24) விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) தனபால் (விவசாயம்) தெரிவித்துள்ளார்.

 சிவகங்கையில் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 24) விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) தனபால் (விவசாயம்) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:  சிவகங்கை மாவட்டத்தில்  உள்ள  விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் அனைத்துத் துறை உயர்  அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர். 
எனவே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை மனு மூலமாகவும், நேரடியாகவும் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com