தினமணி செய்தி எதிரொலி: புதுவயல் மின்மாற்றியைச் சுற்றியிருந்த வேலிக்கருவேல மரங்களை அகற்றியது மின்வாரியம்
தினமணி செய்தி எதிரொலியாக புதுவயல் மின்மாற்றியைச்சுற்றியிருந்த வேலிக்கருவேல மரங்களை அகற்றி மின்வாரிய ஊழியர்கள் திங்கள்கிழமை பராமரிப்பு மேற்கொண்டனர்.
காரைக்குடி அருகே புதுவயல் பேருந்து நிலையம் பின்புறப் பகுதியில் முள்புதருக்குள் ஆபத்தான நிலையில் உள்ள மினமாற்றி என கடந்த வெள்ளிக்கிழமை (நவ. 17) தினமணியில் செய்தி வெளியிடப் பட் டிருந்தது.
மின்சாரவாரியத்தின் மின்மாற்றி வேலிக்கருவேல மர முள்புதருக்குள் இருப்பதால் பராமரிப்பு தினத்தில் அதனை அகற்றி பராமரிக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு குறித்து அச்செய்தில் சுட்டிக்காட்டப் பட்டிருந்தது.
இதையடுத்து திங்கள்கிழமை (நவ.20) மாதாந்திரப் பராமரிப்பு என புதுவயல் உள்ளிட்ட பகுதிகளடங்கிய சாக்கவயல் துணை மின்நிலையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் மின்வாரிய ஊழியர்கள் பராமரிப்புப் பணியை மேற்கொண்டனர்.இதில் இதுவரை அகற்றப்படாமல் ஆபத்தான நிலையில் இருந்த புதுவயல் பேருந்து நிலை யம் பின்புறப்பகுதியில் உள்ள மின் மாற்றியைச்சுற்றியிருந்த வேலிக்கருவேல் மரங்கள் மின்வாரிய ஊழியர்களால் அகற்றப்பட்டன.