வட்டாட்சியரை மாற்றக்கோரி போராட்டம்

தேவகோட்டை வட்டாட்சியரை பணியிட மாற்றம் செய்யக்கோரி  கிராம உதவியாளர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேவகோட்டை வட்டாட்சியரை பணியிட மாற்றம் செய்யக்கோரி  கிராம உதவியாளர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் தேவகோட்டை வட்டாசியர் அலுவலக வாயிலில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ராசு தலைமை வகித்தார்.  தேவகோட்டை வட்டத்தில் கிராம உதவியாளர்கள் மீது ஊழியர் விரோத போக்கை கடைபிடித்து வருவதாகவும் கிராம உதவியாளர்களைக் கொத்தடிமைகளை போல் நடத்துவதாகவும் குற்றம் சாட்டி வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேவகோட்டை வட்டத்தில் இருந்து 16 பெண்கள் உள்பட 51 கிராம உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.
 வட்டாட்சியர் அலுவலக வாயிலில் காலை முதல் மாலை வரை அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com