சிவகங்கை பகுதியில் சனிக்கிழமை (அக். 7) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் மு.சிவலிங்கம் (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கையில் உள்ள துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக். 6) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே சிவகங்கை நகர், புதுப்பட்டி, இடையமேலூர், தமறாக்கி, கூட்டுறவுபட்டி, மலம்பட்டி, மேலப்பூங்குடி, வாணியங்குடி,கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, சோழபுரம் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மினி விநியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.