தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாநில அளவிலான துளிர் வினா-விடை போட்டியில் முதலிடம் பிடித்த தேவகோட்டை என்.எஸ்.எம்.வி.பி.எஸ். பள்ளி மாணவர்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
சமீபத்தில், கோயம்பத்தூர் தனியார் கல்லூரியில் நடைபெற்ற வினா-விடை போட்டியில், இப்பள்ளியின் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களான பைரவ், கார்த்திகேயன், அப்துல் ரசீத் ஆகியோர் பங்கேற்று, மாநில அளவில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற இம்மாணவர்களையும், பயிற்சியளித்த ஆசிரியர் முத்துராமசாமி ஆகியோரை, பள்ளிச் செயலர் ராமநாதன், ஆட்சிக்குழு உறுப்பினர் அருணாச்சலம், தலைமையாசிரியர் வெங்கடாசலம் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.