சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் அக்.27 இல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனபாலன்(விவசாயம்) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வரும் அக்.27 இல் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் ஆட்சியர் க.லதா தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.ஆகவே மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ளள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.