பெண்கள் கல்லூரியில் கருத்தரங்கம்

பூவந்தியில் உள்ள மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில், கருத்தரங்கம்

பூவந்தியில் உள்ள மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில், கருத்தரங்கம் நடைபெற்றது.  கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற இக் கருத்தரங்குக்கு, கல்லூரியின் முதல்வர் ஆர். ராஜராஜேஸ்வரி தலைமை வகித்தார். மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் உதவிப் பேராசிரியர் எம். கார்த்திகா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சிந்தனையின் படைப்பு திறன் குறித்தும், பிரச்னைகளை தீர்ப்பது குறித்தும் பேசினார். இதில், கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக, உதவிப் பேராசிரியர் என். வினோதினி வரவேற்றார். நிறைவாக, என். வந்தனா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com