திருப்பத்தூர் அருகே தாய் தனது குழந்தையுடன் தீக்குளித்து சாவு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே ஆலங்குடி கிராமத்தில் சனிக்கிழமை தாய் தனது குழந்தையுடன் தீக்குளித்து உயிரிழந்தனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே ஆலங்குடி கிராமத்தில் சனிக்கிழமை தாய் தனது குழந்தையுடன் தீக்குளித்து உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் அருகே நாச்சியாபுரம் போலீஸ் சரகத்துக்குள்பட்ட ஆலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கும், கோவிலூர் நெசவாளர் காலனியை சேர்ந்த மாதன் என்பவரது மகள் சிவரஞ்சனிக்கும் (27), கடந்த 2013 இல் திருமணம் நடந்துள்ளது. அதன்பின்னர், வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற முத்துக்குமார், சமீபத்தில்தான் ஊர் திரும்பியுள்ளார்.
இந்நிலையில், கணவன், மனைவியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவரஞ்சனி தனது இரண்டரை வயது ஆண் குழந்தையான லோகேஸ்வரன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அதையடுத்து, மிகவும் ஆபத்தான நிலையில் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு தாயும், சேயும் கொண்டு செல்லப்பட்டனர். மேல் சிகிச்சைக்கு சிவகங்கை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. தாய் சிவரஞ்சனி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி சிவரஞ்சனியும் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து, நாச்சியார்புரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com