மானாமதுரையில் அதிமுக பேச்சாளரை தாக்க முயற்சித்த 3 பேர் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளரின் காரை வழிமறித்து தாக்க முயன்ற தினகரன் ஆதரவாளர்கள் 3 பேர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளரின் காரை வழிமறித்து தாக்க முயன்ற தினகரன் ஆதரவாளர்கள் 3 பேர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மானாமதுரையில், அதிமுகவின் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அணியினர் வாரச் சந்தை முன்பாக வெள்ளிக்கிழமை இரவு அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடத்தினர்.
இக் கூட்டத்தில், சிவகங்கை தொகுதி எம்.பி. செந்தில்நாதன், அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர்.
அதன்பின்னர், கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளர் நெத்தியடி நாகையன் பேசினார். அப்போது அவர், டி.டி.வி. தினகரனை கடுமையாக சாடினார். பொதுக் கூட்டம் முடிந்ததும் பேச்சாளர் நெத்தியடி நாகையன், குணசேகரனுடன் காரில் ஏறிச் சென்றுள்ளார். தேவர் சிலை அருகே சென்று கொண்டிருந்தபோது, இவர்கள் சென்ற காரை தினகரன் ஆதரவாளர்களான நாகு, சுரேஷ்குமார், விஜயக்குமார் உள்ளிட்ட சிலர் சேர்ந்து மறித்து, பேச்சாளர் நெத்தியடி நாகையனை தாக்க முயன்றுள்ளனர்.
தகவலறிந்து பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். அதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
இச் சம்பவம் குறித்து, மானாமதுரை காவல் நிலையத்தில் ஒன்றியச் செயலர் குணசேகரன் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் நாகு, விஜயக்குமார், சுரேஷ்குமார் ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com