மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே திங்கள்கிழமை கிணற்றுக்குள் இறங்கி வேலை பார்த்துக்கொண்டிருந்த கூலித் தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே திங்கள்கிழமை கிணற்றுக்குள் இறங்கி வேலை பார்த்துக்கொண்டிருந்த கூலித் தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
  மதுரை மாவட்டம் கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்(45), இவர் திருப்புவனம் அருகே கழுகேர்கடை கிராமத்தில் இஸ்மாயில் என்பவருக்குச் சொந்தமான கிணற்றுக்குள் இறங்கி ஆழப்படுத்தும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கிணற்றுக்குள் இருந்த நீர்மூழ்கி மோட்டாரில் கசிந்து கொண்டிருந்த மின்சாரம் முருகேசன் மீது பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com