சிவகங்கை, திருப்பத்தூரில் ஆகஸ்ட் 18 மின்தடை

சிவகங்கை, திருப்பத்தூர் துணை மின்நிலையங்களில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள்  நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை, திருப்பத்தூர் துணை மின்நிலையங்களில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள்  நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
    எனவே, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிவகங்கை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் சிவகங்கை நகர், புதுப்பட்டி, இடையமேலூர், தமறாக்கி, கூட்டுறவுபட்டி, மலம்பட்டி, மேலப்பூங்குடி, வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, சோழபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் மினி விநியோகம் நிறுத்தப்படும் என, சிவகங்கை கூட்டு மின் தொகுப்பின் செயற்பொறியாளர் ஆர்.வீரமணி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    திருப்பத்தூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும், கீழச்சிவல்பட்டி, பிள்ளையார்பட்டி, கருப்பூர், தென்கரை, திருக்கோஷ்டியூர், மல்லாக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களிலும் காலை 9  முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என,திருப்பத்தூர் மின்பகிர்மானச் செயற்பொறியாளர் பாட்ஷா முகமது தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com