சிவகங்கையில் உள்ள மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி பிப்.2 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் தொடர்ந்து வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரிக்கு கடந்த ஜன.23 முதல் காலவரையறை இன்றி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் பிப்.2 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் அனைத்து வகுப்புகளும் நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.