சிவகங்கையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிப்.16-இல் (வெள்ளிக்கிழமை) தனியார் நிறுவனங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிப்.16-இல் (வெள்ளிக்கிழமை) தனியார் நிறுவனங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு நல அலுவலர் ம.பேச்சியம்மாள் வெளியிட்டுள்ள செய்தி விவரம்: 
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பிப்.16-ஆம் தேதி  (வெள்ளிக்கிழமை) தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில், சுந்தரம் கிளைடன் எனும் தனியார் நிறுவனம் கலந்து  கொண்டு காலியாக உள்ள தொழில்நுட்பவியல் பயிற்சியாளர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளது. 
முகாமில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 26 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். மேலும், டிஎம்இ,டிஏஇ, டிஇஇஇ, ஐடிஐ, பத்தாம் வகுப்பு (தேர்ச்சி,தோல்வி) பிளஸ் 2(தேர்ச்சி,தோல்வி) எனும் கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும். 
மேற்கண்ட தகுதியுடைய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அனைத்து கல்விச் சான்றிதழ்களுடன் தங்களது 5 பாஸ்போட் அளவு புகைப்படத்துடன் காலை 11 மணியளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொள்ளலாம். 
இந்த முகாமில் கலந்து கொண்டு பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com