சிவகங்கையில் உள்ள மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வரும் பிப்.26 முதல் மார்ச்-2 வரை நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை கல்லூரி முதல்வர், துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர்களுடன் பெற்றோர் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் தவறாது கலந்து கொண்டு அவர்களின் நன்னடத்தை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என கல்லூரியின் முதல்வர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.