சிவகங்கை அருகே சோழபுரத்தில் உள்ள ரமண விகாஸ் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை யோகாசன பயிற்சி முகாம் நடைபெற்றது.
சார்பில் இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு வொர்கவுட் வொண்டர்ஸ் உடற்பயிற்சி மையத்துடன் இணைந்து இப்பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் மையத்தின் இயக்குநர் நிமலன்நீலமேகம் தலைமையிலான குழுவினர் மற்றும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சர்வதேச யோக சித்தி மையத்தின் பயிற்றுநர்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகாசனங்கள் குறித்து செயல்முறை விளக்கமளித்தனர்.
மேலும், பரத நாட்டியம், சிலம்பாட்டம் ஆகியவை நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தாளாளர் கே.முத்துக்கண்ணன், சர்வதேச யோக சித்தி மையத்தின் புரவலர் விபுலானந்தம் முருகதாஸ் உள்ளிட்ட யோகாசன பயிற்சியாளர்கள்,பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.