தேவகோட்டையில் திருவள்ளுவர் தமிழ்மன்றம் சார்பில் திருவள்ளுவர் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்சிவகங்கை மக்களவைத்தொகுதி உறுப்பினர் பி.ஆர்.செந்தில் நாதன் முன்னிலை வகித்தார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் லதா வாழ்த்திப் பேசினார். இலக்கிய மேகம் சீனிவாசன் நூல் அறிமுக உரையாற்றினார். தமிழ்நாடு கதர் மற்றும் கிராம தொழில்த்துறை அமைச்சர் பாஸ்கரன், புதிய வடிவ திருக்குறள் என்ற நூலை வெளியிட்டு, போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். ஜெமீன்தார் நாராயணன் செட்டியார் நூலைப் பெற்றுக் கொண்டார். மன்றத்தின் நிறுவனத் தலைவர் வாழ்க வளமுடன் ராதாகிருஷ்ணன் வரேவற்றார். ஒருங்கிணைப்பாளர் கவிஞர் பிரைட் நன்றி கூறினார்.முன்னதாக மகளிருக்கான கோலப்போட்டியும், முதியவர்களுக்கான நடைபோட்டியும் நடைபெற்றது.