சிவகங்கை அருகே அனுமதியின்றி  மாட்டுவண்டிப் பந்தயம்: 9 பேர் மீது வழக்கு

சிவகங்கை அருகே அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம் நடத்தியதாக 9 பேர் மீது சிவகங்கை தாலுகா போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

சிவகங்கை அருகே அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம் நடத்தியதாக 9 பேர் மீது சிவகங்கை தாலுகா போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
சிவகங்கை அருகே கூட்டுறவுப்பட்டியில் உள்ள மந்தை கருப்பண சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை அனுமதியின்றி சிவகங்கை-மேலூர் சாலையில் மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
இதுகுறித்தப் புகாரின் பேரில் கூட்டுறவுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரணன் மகன் ராஜ்குமார் (35) உள்பட 9 பேர் மீது சிவகங்கை தாலுகா போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com