சிவகங்கை அருகே அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம் நடத்தியதாக 9 பேர் மீது சிவகங்கை தாலுகா போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
சிவகங்கை அருகே கூட்டுறவுப்பட்டியில் உள்ள மந்தை கருப்பண சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை அனுமதியின்றி சிவகங்கை-மேலூர் சாலையில் மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
இதுகுறித்தப் புகாரின் பேரில் கூட்டுறவுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரணன் மகன் ராஜ்குமார் (35) உள்பட 9 பேர் மீது சிவகங்கை தாலுகா போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.