மானாமதுரையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்திக் சிதம்பரம் சி.பி.ஐ யால் கைது செய்யப்பட்ட நடவடிக்கையைக் கண்டித்து திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்திக் சிதம்பரம் சி.பி.ஐ யால் கைது செய்யப்பட்ட நடவடிக்கையைக் கண்டித்து திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
பேரூராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மேற்கு வட்டாரத் தலைவர் கணேசன், எஸ்.சி.பிரிவு நகர் தலைவர் பழனிவேல்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஆர்ப்பாட்டத்தில்  காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில துணைத் தலைவர் டாக்டர் எஸ்.செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டது மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் போக்கு எனப் பேசினர். 
காங்கிரஸ் ரயில்வே தொழிற்சங்கத் தலைவர் ஜி.ராஜாராம், மாவட்ட துணைத் தலைவர் காசிராஜன், மாவட்ட இணைச்செயலாளர் வல்லகொண்டையன், எஸ்.சி,பிரிவு துணைத் தலைவர் ரமேஷ்கண்ணன், செயற்குழு உறுப்பினர் பாண்டிவேல், தொழிற்சங்க மாவட்டத் தலைவர் முத்துக்கருப்பன், சிறுபான்மை பிரிவு தலைவர் காஜாமுகைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com