பாம்பு கடித்து சிறுவன் சாவு

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் வியாழக்கிழமை இரவு பாம்பு கடித்து சிறுவன் உயிரிழந்தான்.

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் வியாழக்கிழமை இரவு பாம்பு கடித்து சிறுவன் உயிரிழந்தான்.
 திருப்பாச்சேத்தி காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் உதயக்குமார். இவரது மகன் கவின் (9), இங்குள்ள அரசுப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வியாழக்கிழமை இரவு உதயக்குமார் வீட்டின் பின்பக்கம் கட்டியிருந்த மாட்டை அவிழ்க்கச் சென்றார். அப்போது பின்னால் கவினும் சென்றுள்ளார். அங்கிருந்த பாம்பு கவினை கடித்து உடலில் விஷம் ஏறி உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே கவின் உயிரிழந்தார்.
இதுகுறித்து திருப்பாச்சேத்தி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com