சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ்.சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தேவகோட்டை என்.எஸ்.எம்.வி.பி.எஸ்.மேல்நிலைப்பள்ளியிலிருந்து அணிவகுப்பு ஊர்வலத்தை தேவகோட்டை ஜமீன்தார் ஏ.எல்.நாராயணன் செட்டியார் தொடக்கி வைத்தார்.
ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று சிலம்பனிகோயிலில் முடிவடைந்தது.
பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சாரதா சேவாஸ்ரம நிறுவனர் ஆத்மானந்த மகாராஜர் ஆசி வழங்கி பேசினார்.
சுதேசி ஷாக்ரன் மன்ஞ் மாநில இணைஅமைப்பாளர் இளங்கோ சம்பத் பேசினார். முன்னதாக மாவட்ட செயலாளர் சாமி வரவேற்றார். நகரச் செயலாளர் முத்துராமன் நன்றி கூறினார்.