தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அருப்புக்கோட்டை கோட்ட செயற்பொறியாளர் இரா. கண்ணன் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அருப்புக்கோட்டை கோட்டத்திற்கு உள்பட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டமானது வெள்ளிக்கிழமை (ஆக. 12) திருச்சுழி சாலையில் உள்ள கோட்ட செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும்.இந்நிகழ்ச்சியானது விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் ஏ. அசோக்குமார் தலைமையில் நடைபெற உள்ளதால் அவ்வேளையில் மின்நுகர்வோர் மின்சாரம் தொடர்பான தங்களது குறைகளை நேரில் தெரிவித்து தீர்வு காணலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.