காந்தி நகர் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா

விருதுநகர் காந்தி நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் ஆடி பொங்கல் விழாவை முன்னிட்டு,  திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

விருதுநகர் காந்தி நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் ஆடி பொங்கல் விழாவை முன்னிட்டு,  திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
        விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் காந்தி நகர் உள்ளது. இங்குள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
     இக்கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு, கடந்த வெள்ளிக்கிழமை கொடி ஏற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து, தினமும் பல்வேறு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
      வியாழக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com