சிவகாசி பெல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி கல்லூரியில், சுதந்திர தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை பள்ளி மாணவ, மாணவிளுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டியில், 12 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 160 பேர் பங்கேற்றனர். இதில், விநாடி-வினா, ஓவியம், வண்ணக் கோலம், வாலிபால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, கல்லூரி நிர்வாகி ராஜாசிங் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில், முதல்வர் ஆர். லியோ ராபட் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.