விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ஏழாயிரம் பண்ணையில் டிசம்பர் 7ஆம் தேதி (வியாழக்கிழமை) மின் தடை ஏற்படும். அன்றைய தினம் ந.சுப்பையாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அதன் கீழ் மின்விநியோகம் பெறும் ந.சுப்பையாபுரம், நள்ளி, உப்புத்தூர், கரிசல்பட்டி, ஏழாயிரம்பண்ணை, எழுமிச்சங்காய்பட்டி, சானாங்குளம், கரிசல்பட்டி, இ.ரெட்டியபட்டி, இ.ராமநாதபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் நிறுத்திவைக்கப்படும். சிவகாசி கோட்ட செசயற்பொறியாளர் ஆர்.செல்வம் இதனை தெரிவித்துள்ளார்.