இன்று  மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அருப்புக்கோட்டையில்  மின்நுகர்வோர் குறைதீர்க்கூட்டம்  டிச.8 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

அருப்புக்கோட்டையில்  மின்நுகர்வோர் குறைதீர்க்கூட்டம்  டிச.8 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. .அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி செல்லும் சாலையில் உள்ள கோட்ட செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும்.இதில் அருப்புக்கோட்டை கோட்டத்திற்கு உள்பட்ட அருப்புக்கோட்டை நகர், திருச்சுழி, நரிக்குடி,பந்தல்குடி,ஆத்திபட்டி,காரியாபட்டி,வேலாயுதபுரம் ஆகிய ஊர்கள் மற்றும் அவற்றைச்சுற்றியுள்ள பகுதி மின்நுகர்வோர் பங்கேற்கலாம்.  இக்கூட்டத்திற்குத் தலைமை வகிக்கும் விருதுநகர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் ஏ.அசோக்குமாரிடம் மின் பகிர்மானம் தொடர்பான தங்களது குறைகளை நேரில் தெரிவித்துத் தீர்வு காணலாம் என அருப்புக்கோட்டை கோட்ட செயற்பொறியாளர் ஆர்.கண்ணன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com