கிணறு தோண்டும்போது  தவறி விழுந்த முதியவர் சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த முதியவர் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த முதியவர் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
ராஜபாளையம், தெற்கு வெங்காநல்லூர் முதுகுடியைச் சேர்ந்தவர் செல்லையா (70). இவர், வியாழக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நக்கமங்கலத்தில் உள்ள வீராச்சாமி நாயுடு என்பவரின் தோட்டத்தில் உள்ள கிணறை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். 
அப்போது,  முதியவர் நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.  இது குறித்து மல்லி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com