விருதுநகர், பாண்டியன் நகரில் உள்ள சமூகநலத் துறை அலுவலகம் முன்பாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடிப் பணியாளர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, விருதுநகர் வட்டாரக் கிளைச் செயலர் பூங்கோதை தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், இளநிலை உதவியாளருக்கு இணையான சம்பளம் அங்கன்வாடி பணியாளர்களுக்கும், அலுவலக உதவியாளருக்கு இணையான சம்பளம் அங்கன்வாடி உதவியாளர்களுக்கும் வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக் குழுவில் உள்ளபடி ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
சனிக்கிழமை மற்றும் மே மாதம் முழுவதும் விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், 30-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.