குடியரசுத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதை ராஜபாளையம் நகர பாஜக கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.
காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் நகர தலைவர் சந்திரன் தலைமையில், மாவட்ட பொது செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் நகரப் பொருளாளர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட நெசவாளர் அணிச் செயலாளர் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.