பெண்ணுக்கு கொலை மிரட்டல்: ஒருவர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வ.புதுப்பட்டியில் நாயுடு சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட கோயில் திருப்பணிக் குழுக் கூட்டம் 28.5.2017 அன்று நடைபெற்றது. இதில் அதே ஊரைச் சேர்ந்த சேதுராணி (50)உள்பட சில பெண்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் சனிக்கிழமை தனது வீட்டின் முன் சேதுராணி நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த இதே ஊரைச் சேர்ந்த த.ராமராஜ் என்பவர், பெண்கள் எப்படி திருப்பணிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று கூறி தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து சேதுராணி, வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் ராமராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com