விருதுநகர்
ராஜபாளையம் அருகே ஆர்ப்பாட்டம்
ராஜபாளையம் அருகே சேத்தூரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம் அருகே சேத்தூரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், இச்செயலில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, இக் கட்சி நிர்வாகி பிச்சை தலைமை வகித்தார். வரதராஜன் முன்னிலை வகித்தகார்.
முன்னாள் எம்.பி. பொலிங்கம் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து, அதன் நோக்கம் குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ரவி, வீராச்சாமி, பால்ராஜ், பட்டாணி உள்ளிட்ட பலர் பேசினர்.