கல்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

விருதுநகர் அருகே சின்ன தாதம்பட்டியில் கல்குவாரிக்கு அனுமதி வழங்க கூடாது என மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானத்திடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

விருதுநகர் அருகே சின்ன தாதம்பட்டியில் கல்குவாரிக்கு அனுமதி வழங்க கூடாது என மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானத்திடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: விருதுநகர் அருகே உள்ள சின்ன தாதம்பட்டியில் சுமார் 300 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த கல்குவாரி மூடப்பட்டது. தற்போது, மீண்டும் கல்குவாரி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இக்குவாரி இருக்கும் வீடுகளுக்கும் இடையே 100 மீ இடை வெளி மட்டுமே உள்ளது. இதனால், வீடுகளில் அதிர்வு ஏற்படுவதுடன் விரிசலடையும் நிலை உள்ளது. மேலும், குடிநீர் தட்டுப்பாடு உருவாவதுடன், விவசாய நிலத்திற்கு தண்ணீர் கிடைக்காது. அருகில் உள்ள வாழவந்தாள்புரத்திலும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சின்ன தாதம்பட்டி பகுதியில் கல்குவாரி செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com