அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் விருதுநகர் பணிமனை முன்பு, சம்பள பேச்சுவார்த்தை வாயில் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்த கோரிக்கை தொடர்பாக சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது குறித்த விலரங்களை தொழிலாளர்களிடம் தெரிவிக்கும் வகையில் விருதுநகர் பணிமனை முன்பு வாயில் கூட்டம் நடைபெற்றது. தொமுச பொதுச் செயலாளர் பி.பால் பாண்டியன் தலைமை வகித்தார். ஏஐடியுசி பொதுச் செயலாளர் பாண்டியன், டி.டி.எஸ்.எப் பொதுச் செயலாளர் ராமசாமி, டி.எம்.டி.எஸ்.பி பொதுச் செயலாளர் ஜோசப் கிளாடிஸ், எம்.எல்.எப் பொதுச் செயலாளர் பரசுராமன், டியுசிசி பொதுச் செயலாளர் பாலசுந்தரம், சிஐடியு-சம்மேளன துணை பொதுச் செயலாளர் ஜி.வேலுச்சாமி ஆகியோர் விளக்கிப் பேசினர். சிஐடியு பொதுச் செயலாளர் எம்.வெள்ளைத்துரை நன்றி கூறினார். இதில் அனைத்து சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.