சசிகலாவின் அதரவாளர்களுக்குச் சொந்தமான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட வருமானவரித் துறை சோதனை குறித்து வெளிப்படைத்தன்மை வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் ம. திலகபாமா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: சசிகலாவின் ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் சிக்கிய ஆவணங்கள், ரொக்கப் பணம், பத்திரங்கள், தங்க நகைகள், வைரங்கள், வங்கிக் கணக்கு உள்ளிட்டவை குறித்து, வருமான வரித் துறை அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
இதன்மூலம், சாதாரண மக்களிடம் ஊழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படும். மேலும், ஜனநாயகமும் காக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.