பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

வத்திராயிருப்பிலுள்ள ரங்காராவ் அரிமா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வத்திராயிருப்பிலுள்ள ரங்காராவ் அரிமா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரிமா சங்கப் பொருளாளர் சோம சீனிவாசன் தலைமை வகித்தார். இதில், அரிமா சங்கத்தின் தெ. சுந்தரமகாலிங்கம், க. முருகன், வி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குழந்தைகள் தினத்தின் சிறப்பு குறித்து கருத்துரையாற்றினர்.
மாணவ-மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு அரிமா சங்க செயலர் அ. ஜெயபாலன் பரிசு வழங்கினார். முன்னதாக, நிர்வாக அலுவலர் க. மாரியப்பன் வரவேற்றார். பள்ளி முதல்வர் க. ரஷீலா தவமணி நன்றி கூறினார்.
 மகாத்மா வித்யாலயா: ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்கிழமை தாளாளர் ஜி.எஸ்.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. முதல்வர், எம். ராணி முன்னிலை வகித்தார். ஆசிரியை ஜெ. சுகந்தி வரவேற்றார்.
இதில், மாணவ-மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், ஏராளமான பெற்றோர் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை, ஆசிரியைகள் ஜெ. அவிலாராணி, ஆர். ரூபா செய்திருந்தனர். ஆசிரியை ஆர். அங்காள ஈஸ்வரி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com