ராஜபாளையம் அருகே பணத்தகராறில் தையல் கடைக்காரரை தாக்கிய இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரைச் சேர்ந்தவர் ரமேஷ் (32). இவர் தையல் கடை
வைத்து ஆயத்த ஆடைகள் தைத்து வருகிறார். இவரிடம் இதே பகுதியைச் சேர்ந்த
காசி துணிகளை வாங்கி அதற்கான பணத்தை பல நாள்களாக தர வில்லையாம்.
இதையடுத்து பணத்தை கேட்ட ரமேஷை, காசி,
இவரது நண்பர்கள் சிவகணேஷ், சிவகுமார் ஆகியோர் தாக்கி காயப்படுத்தினராம்.
இதுகுறித்து சேத்தூர் காவல்நிலையத்தில் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸார் மூவர் மீதும் வழக்குப் பதிந்து காசி ,சிவகுமார் இருவரையும் கைது செய்தனர்.