சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரி அழகர்சாமி(30). இவர் தனது மோட்டார் சைக்கிளில் சிவகாசி-விளாம்பட்டி சாலையில் சென்றுள்ளார்.
கல் மண்டபம் அருகே மர்மநபர் ஒருவர் வழி வழி மறித்து கத்தியை காட்டிமிரட்டி ,அவர் பையில் இருந்த பணம் ரூ.3 ஆயிரத்தை
பறித்துக்கொண்டு தப்பியோட முயற்சித்தாராம். அப்போது,
அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன், அந்த நபரை பிடித்து அழகர்சாமி போலீஸில் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த
நபர் பராசக்தி காலனி கருப்பசாமி(29) என தெரியவந்தது. சிவகாசி நகர் போலீஸார் அவரை கைது செய்தனர்.