சாலையில் கூடுதலாக மின்விளக்குகள் அமைத்துத் தர கோரிக்கை

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் கிராமம் இந்திரா காலனி பகுதியில் சாலைகளில் போதிய மின்விளக்குகள் இல்லாததால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் .

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் கிராமம் இந்திரா காலனி பகுதியில் சாலைகளில் போதிய மின்விளக்குகள் இல்லாததால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் .
         அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் இந்திரா காலனி உள்ளது. இங்கு, சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு, கோவிலாங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியும் உள்ளது. இந்நிலையில், இந்திரா காலனியை ஒட்டிச்  செல்லும் சாலையில் போதிய மின்விளக்குகள் இல்லை.
     இச்சாலை வழியாகத்தான் கட்டங்குடி, பண்ணை மூன்றடைப்பு உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டும். மேலும், இரு சக்கர வாகனங்களில் பொதுமக்கள் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்நிலையில், இச்சாலையில் இரவு நேரங்களில் இருட்டாக உள்ளதைப் பயன்படுத்தி,  சமூக விரோதிகள் வழிப்பறி உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொதுமக்கள் இரவில் இச்சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர்.
    எனவே, வழிப்பறி மற்றும் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க, இப் பகுதி சாலையோரம் விரைவில் கூடுதல் மின்விளக்குகள் அமைத்துத் தர, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com