ஸ்ரீவிலி. அருகே இளைஞர் கொலை: இருவர் கைது

விருதுநககர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நிலப் பிரச்னை தொடர்பான முன்விரோதத்தில் இளைஞரை கொலை செய்த வழக்கில், இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

விருதுநககர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நிலப் பிரச்னை தொடர்பான முன்விரோதத்தில் இளைஞரை கொலை செய்த வழக்கில், இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
      இலந்தைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்மாசி மகன் பால்பாண்டி (30). இவரது குடும்பத்துக்கும் கோட்டையூரைச் சேர்ந்த பெரியகருப்பன் மகன் சின்னகருப்பன் என்பவரின் குடும்பத்துக்கும் நிலப் பிரச்னையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால், இரு தரப்பினர் அளித்த புகார் மீதும், நத்தம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக இரு குடும்பத்தாருக்குமிடையே அவ்வப்போது தகராறு நடந்து வந்துள்ளது.      இந்நிலையில், வியாழக்கிழமை இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பால்பாண்டியிடம் எதிர் தரப்பினர் பிரச்னை செய்து ஆபாசமாகப் பேசினராம். உடனே, பால்பாண்டி உயிருக்கு பயந்து ஓடிப்போய் தனது வீட்டுக்குள் கதவைப் பூட்டி இருந்துள்ளார்.
     ஆனால், எதிர் தரப்பினர் கதவை உடைத்து வீட்டினுள் புகுந்து பால்பாண்டியை வெளியே இழுத்து வந்து தப்பி ஓடவிடாமல், அரிவாளால் வெட்டியும் கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளனர்.
      இது குறித்து பால்பாண்டியின் தந்தை அம்மாசி நத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில்,  சின்னக்கருப்பன், இவரது மகன் ஈஸ்வரன், சங்கிலி மகன்கள் பெருமாள், சுப்பிரமணி, முத்தையா மற்றும் மகாலிங்கம் மகன் காலாடி,  வேடன் கருப்பையா ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பெருமாள், காலாடி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com