அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து சிவகாசியில் சனிக்கிழமை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு அக்கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் சதுரகிரி தலைமை வகித்தார்.