"அதிமுக ஆட்சியை கலைக்க முயற்சிப்போரின் கனவு பலிக்காது'

அதிமுக ஆட்சியை கலைக்க முயற்சிப்போரின் கனவு பலிக்காது என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

அதிமுக ஆட்சியை கலைக்க முயற்சிப்போரின் கனவு பலிக்காது என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சார்பில் சனிக்கிழமை இரவு அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு விருதுநகர் மக்களவைத்தொகுதி உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:  இரட்டை இலை சின்னத்தை மீட்க்கமுடியுமா என சிலர் கேட்கிறார்கள். சின்னத்தை மீட்கவே இரு அணிகளும் இணைந்தன. இரட்டை இலை சின்னம் எங்கு உள்ளதோ அங்கு அதிமுகவின் தொண்டன் இருப்பான்.
உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும்.
அதிமுகவில் நடைபெற்ற சகோதரச் சண்டையை வைத்து திமுக குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயன்று தோற்றுவிட்டது.
எனவே இந்த ஆட்சியை கலைக்கு முற்சிக்கும் திமுகவின் கனவு பலிக்காது.
கோயில்களில் அன்னதான திட்டம், திருமணத்திற்கு விலையில்லா தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், அம்மாகுடிநீர், அம்மா மருந்தகம் , பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா. அவர் காட்டிய பாதையில் தற்போது தமிழகத்தில் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்றார்.
இக்கூட்டத்தில் சிவகாசி ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, நகர செயலாளர் அசன்பத்ரூதின் உள்ளிட்டோர் கலந்து கொண்டர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com