சாத்தூர் அருகே கல்குவாரியில் தவறி விழுந்து முதியவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழசெல்லையாபுரத்தை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(68). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி செல்லையாபுரம் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு குளிக்க சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீஸார் தேடி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை செல்லையாபுரம் கல்குவாரியில் தேங்கியுள்ள தண்ணீரில் இறந்த நிலையில் அவர் கிடந்ததுள்ளார். தகவலறிந்த ஏழாயிரம்பண்ணை போலீஸார் நவநீதிகிருஷ்ணனின் உடலை மீட்டனர். இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.