பெண் மானபங்கம்: இளைஞர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லிபுத்தூரைச் சேர்ந்தவர் ரா.தவமணி (50). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு இங்குள்ள துணை மின்நிலையம் அருகே நடந்து வந்து

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லிபுத்தூரைச் சேர்ந்தவர் ரா.தவமணி (50). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு இங்குள்ள துணை மின்நிலையம் அருகே நடந்து வந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் கணேஷ்குமார் (24) என்பவர், தவமணியை வழிமறித்து, மானபங்கம் செய்து ஆபாசமாகப் பேசி, வண்டியை ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டினாராம். 
இது குறித்து தவமணி, மல்லி காவல் நிலையத்தில் புகார் செய்தார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கணேஷ்குமாரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com