ராஜபாளையம் பகுதி கோயில்களில் வியாழக்கிழமை சங்கடஹர சதுர்த்தி பூஜை வழிபாடு நடைபெற்றது. தேவதானம் அருகேயுள்ள மதுரை பிள்ளையார் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலைகளால் அலங்காரம் செய்து சிறப்பு தீபாராதனை வழிபாடு நடைபெற்றது.
நெல்லை, விருதுநகர் மாவட்ட பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். ராஜபாளையம் மலைமுந்தல் விநாயகர்கோவில், மாயூரநாதசுவாமிகோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலிலும் விநாயாகருக்கு பூஜைவழிபாடு நடைபெற்றது.