விருதுநகர் மாவட்டம், சிவகாசி சிவா நகரைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். ஓய்வு பெற்ற காவல் சார்பு- ஆய்வாளரான இவரது மனைவி பூங்கொடி (56). இவர் புதன்கிழமை மதியம் வீட்டின் வாசலில் உட்கார்ந்து இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த இரு இளைஞர்கள் அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி , வீட்டினுள் பீரோவில் இருந்த 5 பவுன் நகையை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து மல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.