கூலித் தொழிலாளியிடம் பணத்தை வழிப்பறி  செய்தவர் கைது

சிவகாசியில் புதன்கிழமை கூலித் தொழிலாளியிடம் பணம் வழிப்பறி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகாசியில் புதன்கிழமை கூலித் தொழிலாளியிடம் பணம் வழிப்பறி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
     சிவகாசி அருகே கோபாலன்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி திருப்பதி (24). இவர் தனது சைக்கிளில், சிவகாசி- திருத்தங்கல் சாலையில் இரட்டை சிலைப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர் வழிமறித்து கத்தியை காட்டிமிரட்டி அவர் பையில் வைத்திருந்த ரூ.600-ஐ பறித்துக் கொண்டு ஓடினாராம். அப்போது, பொதுமக்களின் உதவியுடன் அந்த நபரை பிடித்து போலீஸாரிடம் திருப்பதி ஒப்படைத்தார்.          விசாரணையில் அவர் லிங்கபுரம் காலனி முனியசாமி (32) என தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸார் வழக்குப் பதிந்து முனிசாமியை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com