சாத்தூர் அரசு மருத்துவமனை செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

சாத்தூர் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாத்தூர் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 செவிலியர் மணிலா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்று சாத்தூர் புதிய அரசு மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சாத்தூர் அரசு மருத்துவமனையின் 10-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com