விருதுநகர், பாண்டியன் நகர் தூய சவேரியார் ஆலயத்தில் சாம்பல் புதனையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் திருப்பலி நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் தொடக்கமாக சாம்பல் புதன் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து விருதுநகர் தூய சவேரியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
அப்போது பங்குத்தந்தை என்.ஆரோக்கிய செல்வம் அடிகளார், விருதுநகர் எஸ்.எப்.எஸ். மேல்நிலைப்பள்ளி முதல்வர் அ.அருள் பிரான்சிஸ் அடிகளார், பொருளாளர் லூ.ஜெயராஜ் அடிகளார் ஆகியோர் கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டனர். இந்த தவக்காலம் 40 நாள்கள் அனுசரிக்கப்படுகிறது.